இதே 999 ஐ பயன்படுத்தி மளையாளக் கரையில் இருந்து புறப்பட்டிருக்கும் ஒரு பிரம்மாண்டமான ஹாலிவுட் திரைப்படம் தான் டேம் 999. இந்த திரைப்படத்தை இயக்கயிருப்பவர் ஸோகன் ராய் என்ற மளையாள இயக்குனர். துபாய் வாழ் கேரளத் தொழிலதிபரான இந்த சேட்டன் தன்னுடைய சேட்டைகளை டேம்999 வடிவில் தருவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு அதற்கான மாதிரி படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை வெளியிட்டு அசத்திவிட்டார். ஏற்கனவே மளையாளத்தில் இரண்டு திரைப்படங்களை இயக்கிய இவர் இப்போது ஹாலிவுட் அவதாரம் எடுத்திருக்கிறார் இந்த டேம் 999 மூலமாக. மளையாளத்தின் சிறந்த நடிகரான திலகனும் கூட இந்தப்படத்தில் இருக்கிறார் என்பது கொசுறுத்தகவல்..
என்ன கதை?
100 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட ஒரு பழைய மிக பிரம்மாண்டமான அணையை மையமாக வைத்துத் தான் கதையே.. அந்த அணை மிகவும் பழசாகிவிட்டது.இந்த அணையில் விரிசல் விழுந்திருக்கிறது. இந்த அணைக்கு முன்புபோல தற்போது நீர்மட்டத்தை தாங்கும் சக்தி இல்லை. எனவே அது விரைவில் உடைந்துவிடும். அதனால் அதை சுற்றி வசிப்பவர்களுக்கு பேராபத்து நேரிடும் என பலமுறை உளவுத்துறை மூலம் அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுகிறது. ஆனால் அதைப் பற்றி துளியும் கண்டுகொள்ளாமலிருக்கிறது அரசு. விடுக்கப்பட்ட எச்சரிக்கை ஒரு நாள் உண்மையாகிறது. அந்த அணைக்குள்ளே ஒழிந்திருக்கும் அபாயம் வெடிவைத்து தகர்த்தது போல உடைந்து அதன் தண்ணீர் மிகப்பிரம்மாண்ட ஆழிப்பேரலை வெள்ளமாக மாறி அந்த சுற்றுப்புறத்தையே அழித்து பெரிய அளவில் உயிர்சேதத்தையும் பொருட்சேதத்தையும் உண்டாக்குகிறது.

இந்தக் கதையை நாம் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குல்ல என நீங்கள் அதிகமாக யோசிக்க வேண்டாம். இது தமிழன் தலையில் மொளகாய் அரைக்கும் அதே முல்லைப்பெரியாறு அணையின் கதையைத் தான் இப்படி ஆவிபறக்க ரெடிபண்ண முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார் பிட்டு (குழாய்ப் பிட்டு) ஊரின் கோடீஸ்வர விசுவாசி..முல்லைப்பெரியாறு பிரச்சனையில் நமக்கு தண்ணி காட்டும் கேரளா நாட்டைச் சேர்ந்த ஒருவர் இப்போது தண்ணீரை வைத்து நமக்குப் படம் காட்ட இருக்கிறார்.. நம்மாள் வெறும் போராட்டம் மட்டுமே நடத்த முடியும், அது தவிர ஒன்றுமே செய்ய இயலாது என்பதையும், நாங்கதான் படிச்சி படிச்சி சொன்னோம்ல அணையில் விரிசல் இருக்கு அதனால் அது உடைந்துவிடும் எனவும், யாருடா கேட்டீங்க? இது தான் இறுதியில் நடக்கும் என்பது போலவும் அந்த திரைப்படத்தின் துவக்கவிழாவில் வெளியிடப்பட்ட வால்பேப்பர் படங்களும், கிராபிக்ஸ் செய்யப்பட்ட வீடியோ காட்சிகளும் நமக்கு திகிலை ஏற்படுத்துகின்றன.
படம் எப்படி வருமோ தெரியாது ஆனா டிரைலரை மட்டும் மிக அழகா யோசிச்சி சூப்பரா வெளியிட்டுக்கானுங்க. என்ன தான் எதிரிக்காரன் படமா இருந்தாலும் டிரைலர் மிக அருமையா வந்திருக்கிறதை நாம் சொல்லாமல் இருக்க முடியாது. 2010 ல் இந்த திரைப்படம் வெளிவருமாம். (அதற்குள்ள அணைய கட்டிருவானுங்களோ!)
9 கேரக்டர்கள்,9 ரசனைகள் என துவக்கத்தில் சொல்கிறார்கள். ஆனால் நாம் சொல்வது 9 கேரக்டர்கள், 9 ரசனைகள் ஓக்கே ஆனால் ஒரே ஆப்பு.., அது எங்களுக்குத்தான்...உங்கள் அறையின் விளக்குகளை அணைத்துவிடுங்கள். உங்களிடம் ஹெட்போன் இருக்கிறதா? வால்யூமை முழுமையாக வைத்துக கொண்டு உங்களின் முழு கவணத்தையும் இதிலே செலுத்துங்கள். இதன் பிரம்மாண்டத்தை உணர்வீர்கள்.
கவிஞர் கிளாசுதாசன்:
விரிசலாகிப் போச்சிங்கிறான் டேமு..,
அவனே வச்சி அடிச்சிடுவான் பாமு..,
என்னிக்குமே இளிச்சவாயன் நாமு..,
தமிழன் வெளங்கமாட்டான் கடைசிவர மாமு..,


/சாத்தான் அல்லது ஆவியின் தலையில் மூன்று ஆணிகள் அடிக்கப்பட்டிருக்கும் அதன் அருகில் 999 என எழுதப்பட்டிருக்கும். /
அது 666 தானே. ஓமன் படத்தில வருமே.
கவித டாப்பு.
//வானம்பாடிகள் said...
/சாத்தான் அல்லது ஆவியின் தலையில் மூன்று ஆணிகள் அடிக்கப்பட்டிருக்கும் அதன் அருகில் 999 என எழுதப்பட்டிருக்கும். /
அது 666 தானே. ஓமன் படத்தில வருமே.
கவித டாப்பு.//
அண்ணே! 999 ஆ 666 ன்னு சரியா ஞாபகம் இல்லணே! சுட்டிக்காட்டியதற்கு நன்றிண்ணே!