Jun 17, 2010

சூப்பர் சிங்கர் ஜூனியர் - மழை வருமா???

நிஜாம் கான் @ 2:11 PM
சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 :
கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேலாக இழு இழு என இழுத்து கடைசியாக இன்று இறுதிச்சுற்றை காண்கிறது ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர்2. இந்த ஒரு வருடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் குரல் தேர்வில் கலந்து கொண்டு பலசுற்றுக்கள் முடிந்து ஒரு வழியாக இன்றைக்கு இறுதியாக 5 பேர் இறுதிப்போட்டியில் கலந்து கொள்கின்றனர். ஷ்ரவன்,அல்கா அஜீத், நித்ய ஸ்ரீ,ஸ்ரீகாந்த் மற்றும் ரோசன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சி இன்று மாலை 6.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற இருக்கிறது. அத்தோடு இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் நேரலையில் ஒளிபரப்பும் ஆகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது. வழக்கமாக விஜய் டிவி நிகழ்ச்சிகள் நேரு உள் விளையாட்டு அரங்கில தான் நடைபெறும். ஆனால் ஒரு மாற்றமாக இந்த நிகழ்ச்சி இன்றைக்கு திறந்த வெளி மைதானமான ஒய்.எம்.சி.ஏ வில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலையில் இருந்து விஜய் டிவி வாகனங்களும், தொழில்நுட்ப ஊழியர்களும் மைதானத்தில் குவிந்தபடி இருக்கின்றனர். ராயப்பேட்டையிலிருந்து ஆயிரம் விளக்கு, அவ்வை சண்முகம் சாலை, அண்ணா சாலை செல்லும் பாதைகளின் ஓரங்களில் இந்த ஐந்து போட்டியாளர்களும் காட்சியளிக்கும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. மைதானத்தில் பிரம்மாண்டமான அழகான மேடை அமைக்கப்ப‌ட்டுக் கொண்டிருக்கின்றன

சினிமா சூட்டிங்குக்கு பயன்படுத்தப் படும் லைட் வேன்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நேரடி ஒளிபரப்புக்கான வேலைகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.ஆனால் அங்கே பணிபுரிந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு டெக்னீசியன்கள் முகத்திலும் ஒரு சோகத்தை காணமுடிந்தது. ஆமாம். சென்னையில் இன்று காலை 11 மணியிலிருந்து தற்போது வரை வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்கிறது. அத்தோடு லேசான தூறல் போட்டுக் கொண்டும் இருக்கிறது. கேராளா,மஹாராஷ்டிராவில் பெய்யும் கனமழையின் சாரல் இங்கேயும் தாக்கினால் இன்றைக்கு சூப்பர் சிங்கர் ஜூனியரில் சங்கீத மழையுடன் வான் மழையும் சேர்ந்து வண்ணமயமாக்கிவிடும். பார்க்கலாம்..

சுட்டுக்கொல்லப்பட வேண்டிய பயங்கரவாதிகள்:

சென்னை மந்தை வெளியை சேர்ந்தவர் நான்சி என்பவரும் விழுப்புரத்தை சேர்ந்த சரவணன் என்ற வாலிபரும் காதலர்கள். கடந்த 14-ந்தேதி நான்சியை பார்ப்பதற்காக சரவணன் சென்னைக்கு வந்தார். கிரீன்வேஸ் ரோடு பறக்கும் ரெயில் நிலையத்தில் தன் காதலியுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார் சரவணன். அப்போது அங்கு வந்த 3 ரவுடிகள், நான்சியின் கையை பிடித்து இழுத்து தவறாக நடக்க முயன்றனர். அவர்களிடமிருந்து தன் காதலியை காப்பாற்றுவதற்காக போராடிய சரவணனை, அந்த‌ ரவுடிக் கும்பல் கத்தியால் குத்தி கொன்றது. இந்த கொலை வழக்கில் தேடப்பட்ட அந்த ரவுடிகள் நேற்று மாலை சரண்டைந்தனர்.

சென்னை நகரம் வரவர ரவுடிகளின் கோட்டையாக மாறி வருவதை யாராலும் மறுக்க முடியாது. சாதாரண ரவுடிகளாக இருக்கும் இவர்கள் குழு அமைத்து கூலிப்படையாக மாறிவிடுகின்றனர். கூலிக்கு கொலை செய்வது என்பது தான் இவர்களுடைய பிரதான தொழிலே. ஆளைப் பொருத்து கூலி வேறுபடுகிறது. இப்போது சாதாரணமாக ஒரு அசால்டு செய்வதற்கு குறைந்தபட்ச கூலி 1 லட்சம் ரூபாய். ஆளைப்பொருத்து இது 50 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை நீளும். இதுபோன்ற ரவுடிகள் அரசியல் கட்சிகளுக்கு அடியாளாகவும் செயல்படுகிறார்கள். அரசியல் கொலைகளும் இவர்கள் மூலம் தான் நடத்தப்படுகிறது. சமீபத்தில் ராயப்பேட்டையில் நடந்த கவுன்சிலர் கொலையும் இவர்களைப் போன்றவர்கள் தான நடத்தினார்கள். கொலை செய்து விட்டு உடனடியாக தலைமறைவாகி விடுவார்கள். இவர்களை போலீஸ் வலைவிரித்து தேடும். ஆனால் இவர்கள் சாவகாசமாக ஏதாவது ஒரு கோர்ட்டில் சரணடைந்து விடுவார்கள். இவர்களுக்கு அரசியல் பலமிருப்பதால் அடுத்த 15வது நாளில் வெளிவந்து விடுவார்கள். வெளிவந்தவுடன் அடுத்த அசால்ட்டுக்கு தயாராகிவிடுவார்கள்.

இப்போது இங்கே ஒரு அப்பாவியை கொலை செய்தவர்களின் நோக்கம் ஒரு பெண்ணின் கற்பை சூறையாடுவதாக இருந்திருக்கிறது. தன் கண்முன்னே தன் காதலியை மானபங்கப்படுத்துவதை தாங்காமல் தான் சரவணன் போராடி தன் உயிரை விட்டிருக்கிறார். இந்த ரவுடிகள் இப்போது சாவகாசமாக சரணடைந்து விட்டார்கள். இன்னும் சில நாட்களில் ஜாமீனில் வெளிவந்து மீண்டும் ஏதாவது ஒரு பெண்ணின் மானத்திற்கு கேடு விளைவிப்பார்கள். தட்டிக்கேட்டால் கொலை செய்வார்கள். பிறகு சரணடைவார்கள். இவர்களுக்கு தனி சிறை. வெளியே கிடைப்பதை விட நல்ல சாப்பாடு. காவலுக்கு போலீஸ். கோர்ட்டுக்கு அழைத்துச் செல்ல தனி வாகனம் என ராஜ வாழ்க்கை. இதைத் தான் வலியுறுத்துகிறது நமது உளுத்துப் போன சட்டமும் நீதியும். 50 ரூபாய் திருடினால் அவனுக்கு அடியும் உதையும், அதையே 5 கோடி திருடினால் பாதுகாப்பும் பராமரிப்பும். என்னத்தை சொல்வது? இது போன்ற ரவுடிகளை பொதுமக்கள் முன்னிலையில் நிற்க வைத்து சுட்டுக் கொன்றால் அதைப் பார்க்கும் அடுத்தவனுக்கு பயம் வரும். ஆனால் இப்போது இருக்கும் சட்டமும்,சாப்பாடும் குற்றவாளிகளை குற்றாலத்திற்கு அழைத்துச் செல்வதைப் போன்றதாகும். தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும். என்றைக்கு ஒரு பெண் கழுத்து நிறைய நகைகள் அணிந்து நடுஇரவிலும் பாதுகாப்பாய் செல்கிறாளோ அன்றைக்குத் தான் உண்மையான சுதந்திரம் என்ற காந்தியின் கனவு கடைசிவரை கனவாகவே போய்விடும்....

already seen this

10 Response to "சூப்பர் சிங்கர் ஜூனியர் - மழை வருமா???"

  1. அப்துல்மாலிக் said...

    |இது போன்ற ரவுடிகளை பொதுமக்கள் முன்னிலையில் நிற்க வைத்து சுட்டுக் கொன்றால் அதைப் பார்க்கும் அடுத்தவனுக்கு பயம் வரும். |

    அத்வானி கூட சவூதியில் நடைபெருவது போல் தப்பு செய்தவர்களை பொது இடத்தில் சுட்டுதள்ளவேண்டும் என்று சொல்லிருக்கிறார். இது மாதிரி ஒன்னு நடந்தாலே கொஞ்சமேனும் பாதுகாப்பு கிடைக்க வாய்ப்புள்ளது

  2. Anonymous said...

    விஜய் டிவி பிரமண்டமான சண்டிவியை தோற்கடிக்க உதவிய நிகழ்ச்சி

  3. ராம்ஜி_யாஹூ said...

    wish Alka should win

  4. GEETHA ACHAL said...

    மிகவும் அருமையான நிகழ்ச்சி...சூப்பர்ப் சிங்கர்...குழந்தைகள் அருமையாக படுவாங்க...உங்கள் ப்ளாகில் செம்மொழி கீதம் மிகவும் அருமை...பகிர்வுக்கு நன்றி....

  5. அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

    //ரவுடிகளை பொதுமக்கள் முன்னிலையில் நிற்க வைத்து சுட்டுக் கொன்றால் அதைப் பார்க்கும் அடுத்தவனுக்கு பயம் வரும். ஆனால் இப்போது இருக்கும் சட்டமும்,சாப்பாடும் குற்றவாளிகளை குற்றாலத்திற்கு அழைத்துச் செல்வதைப் போன்றதாகும்//

    குற்றவாளிகளைக் குற்றாலத்திற்கு அழைத்துச் செல்வது - இது அழகான எதுகை மோனை!
    ஆனால், சு(க)டும் வேதனையான உண்மை!

  6. நிஜாம் கான் said...

    //அபுஅஃப்ஸர் said...
    |இது போன்ற ரவுடிகளை பொதுமக்கள் முன்னிலையில் நிற்க வைத்து சுட்டுக் கொன்றால் அதைப் பார்க்கும் அடுத்தவனுக்கு பயம் வரும். |

    அத்வானி கூட சவூதியில் நடைபெருவது போல் தப்பு செய்தவர்களை பொது இடத்தில் சுட்டுதள்ளவேண்டும் என்று சொல்லிருக்கிறார். இது மாதிரி ஒன்னு நடந்தாலே கொஞ்சமேனும் பாதுகாப்பு கிடைக்க வாய்ப்புள்ளது//

    நிச்சயமாக அஃப்ஸர். கருத்துக்கு நன்றி!

  7. நிஜாம் கான் said...

    //ஆர்.கே.சதீஷ்குமார் said...
    விஜய் டிவி பிரமண்டமான சண்டிவியை தோற்கடிக்க உதவிய நிகழ்ச்சி//

    கருத்துக்கு நன்றி சதீஷ் சார். தொடர்ந்து வாங்க‌

  8. நிஜாம் கான் said...

    //ராம்ஜி_யாஹூ said...
    wish Alka should win//

    You r correct.. Thanks

  9. நிஜாம் கான் said...

    //GEETHA ACHAL said...
    மிகவும் அருமையான நிகழ்ச்சி...சூப்பர்ப் சிங்கர்...குழந்தைகள் அருமையாக படுவாங்க...உங்கள் ப்ளாகில் செம்மொழி கீதம் மிகவும் அருமை...பகிர்வுக்கு நன்றி....//

    நன்றி கீதா! தொடந்து இணைந்திருங்கள்

  10. நிஜாம் கான் said...

    //NIZAMUDEEN said...
    //ரவுடிகளை பொதுமக்கள் முன்னிலையில் நிற்க வைத்து சுட்டுக் கொன்றால் அதைப் பார்க்கும் அடுத்தவனுக்கு பயம் வரும். ஆனால் இப்போது இருக்கும் சட்டமும்,சாப்பாடும் குற்றவாளிகளை குற்றாலத்திற்கு அழைத்துச் செல்வதைப் போன்றதாகும்//

    குற்றவாளிகளைக் குற்றாலத்திற்கு அழைத்துச் செல்வது - இது அழகான எதுகை மோனை!
    ஆனால், சு(க)டும் வேதனையான உண்மை!//

    நன்றி நிஜாம் பாய்! தொடர்ந்து இணைந்திருங்கள்

Post a Comment

நண்பர்களே! மேற்கண்ட இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் ஏதாவது ஒரு வாக்குப்பட்டியில் உங்களின் வாக்குகளை பதிவுசெய்யுங்கள். அது மேலும் பலரைச் சென்றடைய உதவும். நன்றி!

Labels

FIFA (1) TNTJ (4) அ.மு.செய்யது (1) அங்காடித் தெரு (1) அயோத்தி தீர்ப்பு (2) அரசியல் (7) அஜீத் (1) இந்தியா (14) இலங்கை (9) ஈழம் (7) உ.ரா.வரதராசன் (2) எந்திரன் (1) ஏர்டெல் சூப்பர் சிங்கர்2 (1) காங்கிரஸ் (4) காதலர் தினம் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (2) குமுதம் (1) குமுறல் (2) குழந்தைகள் தினம் (2) குறும்பட விமர்சனம் (3) சாரு (1) சானியா மிர்சா (1) சிந்தனைகள் (5) சிரி (3) சிறுகதை (3) சினிமா (14) சுவடுகள் (1) செம்மொழி மாநாடு (1) செய்திகள் (18) செய்தித் துளிகள் (10) டிசம்பர் 6 (1) டுபாகூர் (5) தமிழகம் (40) தமிழர்கள் (19) தமிழ்10 (1) தமிழ்மணம் (1) தலைவர் கலைஞர் (3) திரட்டிகள் (3) திருநாவுக்கரசர் (1) தினமலர் (2) தீபாவ‌ளி (3) தூர்தர்ஷன் (1) தேர்தல் 2010 (1) தொழில்நுட்பம் (1) நகைச்சுவை (10) நக்கீரன் (2) நித்யானந்தா (7) நீதிக்கதை (3) பர்தா (1) பாலியல் (4) பால்தாக்கரே (1) பேரவல‌ம் (16) பேரழிவுகள் (2) பொங்கல் (2) மக்கள் தொலைக்காட்சி (5) மரபணு (1) மருத்துவம் (2) மஹாத்மா (1) மீலாது விழா (1) முகரம் (1) ரமலான் (5) ரஜினிகாந்த் (2) ராமதாஸ் (1) ருச்சிகா (1) வசந்த் டிவி (1) வடிவேலு (1) வந்தேமாதரம் (1) வள்ளுவர் (1) விருதுகள் (2) வினவு (1) வின்டிவி (2) ஜல்லிக்கட்டு (1) ஜெயலலிதா (2) ஜெயா டிவி (1) ஸ்வீட் காரம் காபி (5)

எவ்வழி

Pages

Related Posts with Thumbnails

தொடர்புக்கு..,