Jul 22, 2010

ஆதித்யா...,

நிஜாம் கான் @ 7:56 AM
தமிழக மக்களை சிரிக்க வைக்கிறது
நகைச்சுவை சேனல் ஆதித்யா - ஆனால்
சிலநாட்களாய் தமிழகத்தை தவிக்க வைத்தான்
இந்த ஆதித்யா..

அரும்பாய் குறும்பாய் திரிந்து
கவலைகளின் தொடக்கத்தை தொடாமல்
குட்டியாய் சுட்டியாய் சுற்றி வந்தவன்
பெட்டிக்குள்ளே பிணமாக..

நல்லக்காதலே நாசமாகி விட்டபோது
கள்ளக்காதலால் கர்ப்பமடைந்த சதிகாரச்
சண்டாளியின் கருவறுப்புக்கு கதிராய்
அமைந்தான் இவன்..

என்ன பாவத்திற்கு தண்டனை இது என‌
தெரியாமல் தவியாய் தவித்து தன்னுயிரை
மாய்த்துக் கொண்டான் தன் தந்தையின்
தவறுக்காக..


பொருப்பில்லாத தந்தைக்கு தண்டனை தர‌
கருப்பு பையால் சுற்றி கடலிலே வீசிவிட‌
பாண்டி சென்றவளுக்கு தாண்டி வந்த பாதை
தவறென தெரியவில்லை..

சென்னைக்குள்ளே சுற்றி வந்த சிறுவண்டை
வண்டியேற்றி நாகைக்கு அனுப்பினாள்.முதன்
முறையாகவே முறையற்ற பயணம் மேற்கொண்டான்
சடலமாக நாகை நோக்கி..

யாருமே வராத இடத்திற்கு தனிமைப் பயணம்
மேற்கொண்டு பரிதாபமாக பஸ் நிலையத்தில்
ஆதரவின்றி..பரிதவிக்கும் பெற்றோரை பிரிந்த
அனாதையாக..

அம்மா! நான் பஸ் நிலையத்தில் கிடக்கும்
பெட்டிக்குள்ளே பிணமாக இருக்கிறேன்..வந்து
இதையாவது மீட்டுச் செல்லம்மா!  என யாரிடமும்
தூது விடமுடியாமல்..

காணாத பிள்ளை கிடைத்துவிடுவான் என்ற‌
காவல்துறையின் ஆறுதல் ஆனந்திக்கு..
ஆனாலும் என் பிள்ளை எங்கே இருக்கிறான்
என்றே தவிப்பாய்..

சாப்பிட்டானா தூங்கினானா என நினைத்து
நினைத்து தன் தூக்கமும் சாப்பாடும் இழந்து
பரிதவித்த‌ தாய், என்னேரமும் நல்ல செய்தி
வருமென நினைத்து..



பிள்ளையைக் கொன்று விட்டு தந்தையோடு
சேர்ந்து தானும் தேடி திரிந்து..ஒரு பக்கம்
பயம், மறுபக்கம் பழிவாங்கிய மகிழ்ச்சி
மனத்துடன் அவள்..

பார்க்கும் லட்சம் கண்களில் என் அம்மாவின்
இரண்டு கண்க‌ள் இருக்காதா என கடைசி ஆவலாய்
பத்திரிகைகளில் இல்லங்கள் தோறும் பிணமாய்ப்
பிரவேசித்த‌ மகன்.. 

ஈ எறும்பு கடிக்க விடாமல் பொத்தி
பொத்தி வளர்த்த மகன் பொட்டிக்குள்ளே
ஈக்கள் மொய்க்க மொய்க்க மடங்கி கிடந்ததை
தாளாத தாய்..

ஒரு வினாடி பிரியாமல் இருந்த மகன்
மொத்தமாக விடை கொடுத்தான்..சென்னை
வீதிகளில் மட்டும் வலம் வந்த அவன் நாகைக்கு
ஏன் சென்றான்?..

ஒரு பூவைக் கருக்கி விட்டு மன்னிப்பு தேடி
கோவில் கோவிலாக அலைந்த அவளுக்கு இனி
மன்னிப்பு என்பதே மறக்கடிக்கப் பட வேண்டும்
மற்றவர்களுக்காக…… 

படங்கள்: நன்றி தினத்தந்தி
already seen this

7 Response to "ஆதித்யா...,"

  1. அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

    மனதை உருக வைத்த சம்பவத்தை
    மனத்தை உருக்கும் வண்ணம்
    படைத்தீர்கள், வசனக் கவிதையாய்!
    அஞ்சலிக் கவிதை!

  2. Kousalya Raj said...

    கண்ணீரை வரவழைக்கிறது உங்கள் கவிதை....மகனை இழந்த அந்த தாயின் சோகம் உங்கள் வரிகளிலும்.... ஈடு செய்யவே முடியாத இழப்பு !!

  3. நிஜாம் கான் said...

    //NIZAMUDEEN said...
    July 22, 2010 9:35 PM
    மனதை உருக வைத்த சம்பவத்தை
    மனத்தை உருக்கும் வண்ணம்
    படைத்தீர்கள், வசனக் கவிதையாய்!அஞ்சலிக் கவிதை!//

    நன்றி நிஜாம் பாய். தொடர்ந்து இணைந்திருங்கள்

  4. நிஜாம் கான் said...

    //Kousalya said...
    July 23, 2010 3:38 PM
    கண்ணீரை வரவழைக்கிறது உங்கள் கவிதை....மகனை இழந்த அந்த தாயின் சோகம் உங்கள் வரிகளிலும்.... ஈடு செய்யவே முடியாத இழப்பு !!//

    நன்றி சகோதரி! நிச்சயமாக ஒரு தாய்க்கு ஈடு செய்ய இயலாத பெரிய இழப்பு

  5. வால்பையன் said...

    :(

  6. ராசராசசோழன் said...

    முள்லாய் தைக்கிறது கவிதையும் நிகழ்வும்..

  7. நிஜாம் கான் said...

    நன்றி வால்பையன்..
    நன்றி ராஜராஜ சோழன்

Post a Comment

நண்பர்களே! மேற்கண்ட இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் ஏதாவது ஒரு வாக்குப்பட்டியில் உங்களின் வாக்குகளை பதிவுசெய்யுங்கள். அது மேலும் பலரைச் சென்றடைய உதவும். நன்றி!

Labels

FIFA (1) TNTJ (4) அ.மு.செய்யது (1) அங்காடித் தெரு (1) அயோத்தி தீர்ப்பு (2) அரசியல் (7) அஜீத் (1) இந்தியா (14) இலங்கை (9) ஈழம் (7) உ.ரா.வரதராசன் (2) எந்திரன் (1) ஏர்டெல் சூப்பர் சிங்கர்2 (1) காங்கிரஸ் (4) காதலர் தினம் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (2) குமுதம் (1) குமுறல் (2) குழந்தைகள் தினம் (2) குறும்பட விமர்சனம் (3) சாரு (1) சானியா மிர்சா (1) சிந்தனைகள் (5) சிரி (3) சிறுகதை (3) சினிமா (14) சுவடுகள் (1) செம்மொழி மாநாடு (1) செய்திகள் (18) செய்தித் துளிகள் (10) டிசம்பர் 6 (1) டுபாகூர் (5) தமிழகம் (40) தமிழர்கள் (19) தமிழ்10 (1) தமிழ்மணம் (1) தலைவர் கலைஞர் (3) திரட்டிகள் (3) திருநாவுக்கரசர் (1) தினமலர் (2) தீபாவ‌ளி (3) தூர்தர்ஷன் (1) தேர்தல் 2010 (1) தொழில்நுட்பம் (1) நகைச்சுவை (10) நக்கீரன் (2) நித்யானந்தா (7) நீதிக்கதை (3) பர்தா (1) பாலியல் (4) பால்தாக்கரே (1) பேரவல‌ம் (16) பேரழிவுகள் (2) பொங்கல் (2) மக்கள் தொலைக்காட்சி (5) மரபணு (1) மருத்துவம் (2) மஹாத்மா (1) மீலாது விழா (1) முகரம் (1) ரமலான் (5) ரஜினிகாந்த் (2) ராமதாஸ் (1) ருச்சிகா (1) வசந்த் டிவி (1) வடிவேலு (1) வந்தேமாதரம் (1) வள்ளுவர் (1) விருதுகள் (2) வினவு (1) வின்டிவி (2) ஜல்லிக்கட்டு (1) ஜெயலலிதா (2) ஜெயா டிவி (1) ஸ்வீட் காரம் காபி (5)

எவ்வழி

Pages

Related Posts with Thumbnails

தொடர்புக்கு..,