Sep 1, 2010

10 வருடம் கடந்த உயிர்வலி

நிஜாம் கான் @ 8:23 PM
2000 ஆம் வருடம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மீது நடந்த வழக்குகளில் பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் அவரை குற்றவாளி என தீர்ப்பளித்தது நீதிமன்றம். நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி இருந்தாலும் அதை எதிர்கொள்ள அந்தக் கட்சியின் தொண்டர்கள் பெயரில் இருந்த குண்டர்கள் தயாரானார்கள். கடைகளை சூறையாடுதல், பேரூந்துகளை சேதப்படுத்துதல் என அவர்கள் ஏற்கனவே திட்டம் வகுத்து தான் இருந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போலவே தீர்ப்பு எதிர்ப்பாக வெளியானவுடன் தங்களது வேட்டைகளை துவக்கினார்கள். அவர்களில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குழு இலக்கியம்பட்டி என்ற ஊரில் நின்று கொண்டு அந்த வழியே வந்த வாகனங்கள் மீது கல்வீசித் தாக்கிக் கொண்டு இருந்தார்கள். அந்த நேரத்தில் தான் அந்த வழியே வந்து சேர்ந்தது கோவை தமிழ்நாடு வேளாண்மைக் கல்லுரியைச் சேர்ந்த பேரூந்து.





அந்த பேரூந்திலே வந்தவர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களும் இல்லை. எந்த அமைப்பைச் சார்ந்தவர்களும் இல்லை. ஆனால் பசியோடு இருந்த வெறிபிடித்த மிருகங்கள் கண்ணில் படும் எதையுமே கடித்துக் குதறுவது போல அந்த பேரூந்தினை வழிமறித்தது அந்த நாசகாரக் கூட்டம். தங்கள் தலைவிக்கு இப்படி ஒரு தீர்ப்பினை வழங்கிவிட்டு நீங்கள் மட்டும் நிம்மதியாக சுற்றுலா செல்கிறீர்களா என சத்தம் பீறிட தங்கள் கைகளில் தயாராய் இருந்த பெட்ரோல் கேன்களை தூக்கி அந்த பேரூந்தை அபிஷேகிக்க ஆரம்பித்தார்கள் அந்த இரக்கமற்றவர்கள்.


பெட்ரோல் வாசனை புகையாய் மாறும் போது அந்த பேரூந்துக்குள்ளே இருந்த அப்பாவி மாண‌விகளுக்கு நடக்கும் விபரீதத்தை புரிந்து கொள்வதற்குள் அந்த கொடூர கூட்டம் பேருந்தின் இரண்டு வாசல்களையும் பூட்டிவைத்தது. அப்பாவி மாணவிகள் செய்வதறியாது அங்குமிங்கும் ஓடியபடி தப்பிக்க முயற்சி செய்ய நடந்த களேபரத்தை உணர அந்த பேரூந்திலே நாம் பயணம் செய்திருந்தால் தான் தெரிந்திருக்கும். பிள்ளைகளை வேளியேற்ற எவ்வளவோ கெஞ்சியும் கூட எதைப்பற்றியும் கவலைப்படாத அந்த கும்பல் அந்த பேரூந்துக்கு தீவைத்தது. பாவம் எவ்வளவோ முயன்றும் வாசல்படி வரை அடைந்த அந்த மூன்று மாணவிகளும் அதற்கு மேல் தங்களின் முயற்சி பலனளிக்காது என முடிவு செய்து அந்த கொடூர தீயின் நாக்குகளுக்கு தங்கள் பூமேனியை தீனியாக்கினார்கள்.



கண்ணுக்கு கண்ணாய் பொத்தி வளர்த்த அருமைப் பிள்ளைகளை எரிந்து போன கரிக்கட்டைகள் போன்ற கோலத்தில் பார்த்த பெற்றோர்களின் நிலை எவ்வாறு இருந்திருக்கும்??? தீயின் தாக்கம் பட வேண்டாம் தங்கள் பிள்ளைகளுக்கு என கருதி அடுப்படியில் இருந்து விடுத்து படிக்க அனுப்பிய பிள்ளைகள் அந்த அடுப்பின் விறகாய் மாறியிருந்தால் அதைப் பார்த்த பெற்றவர்களுகு எப்படி இருந்திருக்கும். சிலவற்றை விளக்கிட முடியாது. அதை அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும் அதன் உயிர்வலி

வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்திய அரசியலமைப்பின் ஆமை வேக விசாரணை துவங்கியது. அதற்கிடையே பல ஆட்சி மாற்றங்கள். வழக்கு பின்வாங்கிய நிலை என எவ்வளவோ பாதைகளை கடந்து ஒரு வழியாக சேலம் நீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பை வழங்கியது. அது மேல்முறையீட்டுக்கு சென்னை வந்து இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இத்தனை கால இடைவெளிக்குள் அந்தப் பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு ஏகப்பட்ட சிக்கல்களைக் கொடுத்தார்கள் சம்பந்தப் பட்டவர்கள். குற்றவாளிகள் தங்கள் கட்சியில் இருந்து நீக்கப்படவேயில்லை. அவர்களை பொருத்தவரை அவர்கள் செய்தது தவறேயில்லை என்ற கண்ணோட்டம் இன்னமும் நிலவுகிறது போலும். தங்களின் தலைவிக்கு இப்படி ஒரு அவமானம் நேர்ந்தால் அதற்கு ஏன் சம்பந்தமில்லாத அப்பாவிகளைக்  கொல்ல வேண்டும்? 


தங்களின் வீட்டில் இருக்கும் மனைவி, பிள்ளைகளை நடுரோட்டில் வைத்து தீவைத்து தங்களின் எஜமான விசுவாசத்தை வெளிப்படுத்தி இருக்கலாமே? அல்லது உண்மைத் தொண்டர்கள் தங்களின் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து ஒரு புரட்சியை செய்திருக்கலாமே? தீயின் அகோரத் தாண்டவத்தில் அந்த இளம் நிராயுதபாணிகள் எத்தனை சிரமம் அனுபவித்து இருப்பார்கள். தீக்குச்சியின் தாக்கம் கூட தாங்காத மாணவிகள் முழுமையாய் சூழ்ந்து எரியும் தீ நாக்குகளுக்கும் தங்கள் தோழிகளை ஒருவரை ஒருவர் காப்பாற்ற முயன்று கடைசியாய் தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்ட அந்த கடைசி நிமிடங்களின் ரணவலிகள் இந்தக் குற்றவாளிகளுக்கு உணர்த்தப் படவேண்டும்.

ஓட்டுப் பெட்டியின் வாசத்தை ஒருமுறை கூட நுகர்ந்திராத‌ மலர்களைக் கொழுத்தி தங்களின் தலைவிக்கு தீபாவளி கொண்டாடிய இந்த அயோக்கியர்களை மீண்டும் மீண்டும் உயிர் கொடுத்து எத்தனை முறை தூக்கிலிட்டாலும் தகும்.

படங்கள்: நன்றி: சக பத்திரிகைகள்
already seen this

1 Response to "10 வருடம் கடந்த உயிர்வலி"

  1. அந்நியன் 2 said...

    துயரத்தை மறந்திருக்கும் அக்குடும்பம் இவ்வினைக் காணும் பட்சத்தில் மேலும் துன்பம் அடைவர்.

    ஆகையால் குற்றவாளிகள் என்று நிருபிக்கப் பட்டக் கயவர்களுக்கு குறைந்த பட்ச்சத் தண்டனையாக தூக்குத் தண்டனை வழங்கும் படி நான் மக்கள் மன்றத்தில் வேண்டிக் கொள்கிறேன்

Post a Comment

நண்பர்களே! மேற்கண்ட இடுகை தங்களுக்கு பிடித்திருந்தால் ஏதாவது ஒரு வாக்குப்பட்டியில் உங்களின் வாக்குகளை பதிவுசெய்யுங்கள். அது மேலும் பலரைச் சென்றடைய உதவும். நன்றி!

Labels

FIFA (1) TNTJ (4) அ.மு.செய்யது (1) அங்காடித் தெரு (1) அயோத்தி தீர்ப்பு (2) அரசியல் (7) அஜீத் (1) இந்தியா (14) இலங்கை (9) ஈழம் (7) உ.ரா.வரதராசன் (2) எந்திரன் (1) ஏர்டெல் சூப்பர் சிங்கர்2 (1) காங்கிரஸ் (4) காதலர் தினம் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (2) குமுதம் (1) குமுறல் (2) குழந்தைகள் தினம் (2) குறும்பட விமர்சனம் (3) சாரு (1) சானியா மிர்சா (1) சிந்தனைகள் (5) சிரி (3) சிறுகதை (3) சினிமா (14) சுவடுகள் (1) செம்மொழி மாநாடு (1) செய்திகள் (18) செய்தித் துளிகள் (10) டிசம்பர் 6 (1) டுபாகூர் (5) தமிழகம் (40) தமிழர்கள் (19) தமிழ்10 (1) தமிழ்மணம் (1) தலைவர் கலைஞர் (3) திரட்டிகள் (3) திருநாவுக்கரசர் (1) தினமலர் (2) தீபாவ‌ளி (3) தூர்தர்ஷன் (1) தேர்தல் 2010 (1) தொழில்நுட்பம் (1) நகைச்சுவை (10) நக்கீரன் (2) நித்யானந்தா (7) நீதிக்கதை (3) பர்தா (1) பாலியல் (4) பால்தாக்கரே (1) பேரவல‌ம் (16) பேரழிவுகள் (2) பொங்கல் (2) மக்கள் தொலைக்காட்சி (5) மரபணு (1) மருத்துவம் (2) மஹாத்மா (1) மீலாது விழா (1) முகரம் (1) ரமலான் (5) ரஜினிகாந்த் (2) ராமதாஸ் (1) ருச்சிகா (1) வசந்த் டிவி (1) வடிவேலு (1) வந்தேமாதரம் (1) வள்ளுவர் (1) விருதுகள் (2) வினவு (1) வின்டிவி (2) ஜல்லிக்கட்டு (1) ஜெயலலிதா (2) ஜெயா டிவி (1) ஸ்வீட் காரம் காபி (5)

எவ்வழி

Pages

Related Posts with Thumbnails

தொடர்புக்கு..,